Thursday, May 23, 2013

சீதனம்-Dowry

"மீன்பாடும் தேன் நாடு" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பாம். அதிலும் அறிவு ஜீவிகள் (வாழ்ந்த, வாழும்) வாழுகின்ற ஒரு நகரம் தான் காத்தான்குடி. இங்கே ஆசான்களுக்கோ, ஆளிம்களுக்கோ எல்லளவும் பஞ்சமில்லை. அதுமட்டுமின்றி இலங்கையில் மிகப்பெரிய முஸ்லிம் கிராமங்களில் இதுவும் ஒன்று.
இவ்வளவு சிறப்பு மிக்க நகரம் "சீதனம்" விஷயத்தில் மட்டும் பொடுபோக்காய் இருப்பது ஏன்???. இப்படியானக் கயவர்களின் வீட்டு வாசற்படிகளில் மேடை போட்டு பேசினாலும் கொடுமை சிறப்பை சொல்லித்தீர்த்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே பிரயோசனம் இல்லாமல் போய்விடுகின்றது
பெட்டை தனமாக கைக்கூலி வாங்கும் விடயம் இன்று நேற்றல்ல, வாழையடி வாழையாகத் தொடர்வதை 'சகோதரி ரிசானாவின்' மரணம் உலகுக்குப் பறைசாட்டியது, என்பதை எவராலும் மறுக்க முடியாது.
பெரும்பான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழும் காத்தன்குடியிலேயே இவ்வவமனச் செயலை நிறுத்தமுடியாது என்றால் நாம் அனைவரும் முஸ்லிம்களாக வாழ்வதில் என்ன அர்த்தம்???
தோழர்களே!
பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய், தந்தையரின் கண்களால் செல்லும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நாளை மறுமையில் நிச்சயமாகப் பதில் சொல்லவேண்டும் என்பதை மனதிற் கொண்டு, எம் ஒவ்வொருவரினதும் "ஆண்மையை" அற்ப சீதனத்திற்கு அடைமானம் வைக்காமல் அழகிய முன்மாதிரியான முஸ்லிம் வாலிபர்களாக வாழ்வோமாக!!!

இவண்,
இப்னு ஹைருல்லாஹ்.

No comments:

Post a Comment